Tuesday, May 26, 2009

பெண் !..

கள்ளிப்பாலை
கவனமாய்
ஊற்று.
தொண்டைக் குழிக்குள்.

வேகமாய் சுற்றும்
மின் விசிறி இருந்தால்
சுவிட்சைப் போட்டு
கதவைப் பூட்டு.

இல்லையேல்
தண்ணீர் தொட்டிக்குள்
தூக்கிப் போடு.

அல்லது
கொஞ்சம் நெல்லையாவது
வாய்க்குள் போடு.

அப்படியே
வீட்டுக்கும் தீ வை.

இருபது வருடம் கழிந்து
இடிவிழவும்
சாத்தியமுண்டு.

No comments: