
என்னுடையது என்று நினைத்துதான்
இது வரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால்..
முதல் முறை உன்னை பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய் குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே ..
இந்த மனசு!..
************************
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி.
**************************
உன்னை கேலி பேசுபவனை எல்லாம்
முறைத்து பார்க்கிறாய் .
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதரனமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே!..
**********************
பயணம் முடிந்ததும்
நீ வீசிவிட்டுப்போன பயணசீட்டு
வீதியில் கிடந்தது புலம்பிகொன்ன்டிருந்தது
பயணம் முடிந்து விட்டதை நினைத்து.
**********************
துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது

என் இதயத்திற்கு .
***********************
தொலை பேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே
அது உன் முத்தத்தை எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது.
***********************
எல்லா பெண்களும்
உதட்டை அழகாய் காட்டுவதற்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறார்கள்.
நீ மட்டும்தான் உதட்டின் அழகை மறைதுக்கொள்வதர்க்காக
லிப்ஸ்டிக் பூசிக்கொள்கிறாய் .
*******************
எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியதுதான் எனினும்
ஒரு கவிதைகூட உன்னை மாதிரி இல்லையே.

********************