Wednesday, August 26, 2009

காதல் கவிதை


ஏனேன்றால் நீ பெண் ............

எனது

வயது வளமை

கனவு கல்வி

உறவு நட்பு

உயரம் எடை

தொடர்பு தொழில்,

இன்னும்

ஏதேதோ ஆரய்ந்து

தயங்குகிற உன்னை,

உயிராய்க்கொள்ள

உன் ஒற்றை

தெற்றுப்பல் சிரிப்பே

போதுமானதாக இருக்கிறது எனக்கு.



காய்ச்சல்


தயவு செய்து

மழையில்

நனையாதே

காய்ச்சல்

மழைக்கு.
காற்றை

சுவாசிக்கிறேன்

உயிர்

வாழ அல்ல

உன்

மூச்சு காற்றும்

அதில் கலந்திருப்பதால்..
.

உன் பார்வை

வார்தைகளால்

காயப்படுத்துவாய்.

பார்வைகளால்

மருந்திடுவாய்.

மருந்திற்கு

ஆசைப்பட்டு

காயப்பட்டுக்கொண்டே

இருக்கிறேன் நான்.

மயிலிறகு

பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில்

மயிலிறகை ஒழித்து

வைப்பதைப் போல

உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.

வைத்திருப்பவனின்
பிரியங்களை

ஒரு போதும்
புரிந்துகொண்டதேயில்லை

மயிலிறகும் நீயும்.


No comments: